பங்காரு அடிகள் மறைவு: வெறுப்பு மனநோய் கும்பலை அடையாளம் காண்க...
பங்காரு அடிகள் மறைவு: வெறுப்பு மனநோய் கும்பலை அடையாளம் காண்க... ----------- ஒருவரது சாதி, இனம், மதம் என்கிற அடையாளங்களை வைத்து அவர் மீது வெறுப்பை உமிழ்வது வெட்கக் கேடானது. அது ஒரு மனநோய். இன அழிப்பு நோக்கத்தின் தொடக்கம் இந்த வெறுப்புதான். “சாதிவெறுப்பு கும்பல்” பிராமணர் அல்லாத வகுப்பில் பிறந்து, அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தகர்க்கும் வழிபாட்டு முறையை அருட்திரு பங்காரு அடிகள் உருவாக்கினார் என்பதற்காகவே – ஒரு கும்பல் அவரை இழிவாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறது. காலம் காலமாக திணிக்கப்பட்ட வைதீக கட்டுப்பாடுகளை அவர் தகர்த்து எறிந்ததை அந்தக் கும்பலால் இன்னமும் சகிக்க முடியவில்லை. கூடவே, தமிழிலேயே வழிபாட்டை நடத்தினார்; கணவனை இழந்தோர், மாதவிடாய் காலம், சாதி வேறுபாடு என எந்த ஒதுக்குதலும் இல்லாத வழிபாட்டை எல்லோருக்கும் சாத்தியமாக்கினார்; மாற்று மதங்களுக்கு கூட மதிப்பளித்தார் என்பதெல்லாம் அந்தக் கும்பலுக்கு எரிகிறது. “இன வெறுப்பு கும்பல்” ‘பங்காரு’ என்கிற பெயர், ‘நாயக்கர்’ எனும் சமுதாயப் பட்டம் – இவற்றை வைத்தே, அவரை தெலுங்கர் என்பதாகக் கருதிக்கொண்டு சில ‘தமிழ்த் தேசிய வியாதிகள்’ அவர்மீது வெறுப்ப